புதிய காலம்

காலங்கள் பல கடந்ததுண்டு
ஆனால் இது எந்த காலம்??
கழிந்த காலங்களை எண்ணி
நேரம் கழிக்கவா..இல்லை வரும்
காலங்களை எண்ணி வருத்தப்படவா?
இரண்டும் இல்லை..
இது நம்மோடு உலகையும் சேர்த்து உணரும் காலம்..
வாழ்வின் பல குறில் நெடில்களை
கண்டிருக்கிறோம்..
இந்த காலமோ இதுவே முதல் முறை நம்முடன்
இனி பல முறை நம் எதிர்கால வாழ்வுடன்..
இக்காலத்தில் தான் பல வினாக்கள் நம்மை சுற்றி..
இனி விடை தேடும் காலமாக..
எங்கே தேடுவது என மீண்டும்
வினாக்கள்..கேள்விகள்..
கேள்..உன்னிடம் கேள்..
தேடு..உன்னோடு தேடு..
உன் வாழ்வை சுற்றி தேடு..
விடைகள் கண்டு வியப்போம்..திகைப்போம்..
இனியாவது நன்மைகளை..நற்பண்புகளை விதைப்போம்..
ஒன்றாய் இணைவோம்..
உயிர்களை மதிப்போம்..
உலகை உணர்வோம்..

Leave a comment